ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் இருக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் நேரிலோ தொலைபேசி வாயிலாகவோ அணுகி விண்ணப்பிக்கலாம்.

இந்நிலையில் தினமும் காலை 10:30 மணி முதல் மாலை 4 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நடைபெறும். இந்த வாய்ப்பினை போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் கிராமப்புறம் மற்றும் நகரப்புற மாணவர்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.