கரூர் மாவட்டத்தில் உள்ள மூலகவுண்டனூர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கரூர்-மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேலம்மாள் பள்ளி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த விக்னேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.