ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியார் நகரில் அறிவிச்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சார்ஜாவில் தங்கி எம்.பி.பி.எஸ் படித்தார். அவருடன் கதிர் காமம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த அபினேஷ் என்பவரும் படித்தார். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அபினேஷ் நாட்டிற்கு வந்துவிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவுசெல்வம் அபினேஷை சந்தித்து ஜெர்மன் நாட்டில் வேலை இருப்பதாக கூறி பணம் செலவாகும் என தெரிவித்துள்ளார்.

இதற்காக பல்வேறு தவணைகளாக அபினேஷ் 17 லட்சம் ரூபாய் பணத்தை அறிவு செல்வத்திடம் கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது அறிவு செல்வன் அபினேஷுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் தான் மாற்றப்பட்டதை அறிந்த அபினேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அறிவு செல்வம் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.