திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சீத்தஞ்சேரி காப்பு காட்டு பகுதியில் வனத்துறை சார்பாக கேமரா கோபுரம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கல்லூரி மாணவரான தினேஷ்குமார் அந்த வழியாக கல்லூரி முடிந்து வீடுக்கு சென்றார். அந்த பகுதியில் வீசிய பலத்த காற்றினால் கேமரா கோபுரம் சரிந்து தினேஷ்குமார் மீது விழுந்தது. இதனால் தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த காட்டில் அதிக செம்மரங்கள் இருப்பதால் வனத்துறையினர் சார்பில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கண்காணிப்பு கேமரா கோபுரம் அமைக்கப்பட்டது. தற்போது தொடர் மழை மற்றும் காற்றினால் கோபுரம் சாய்ந்து மாணவன் உயிரிழந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.