காஞ்சிபுரம் மாவட்ட புதிய ரயில் நிலையத்திற்கு கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு செல்லும் காசி தமிழ் சங்க விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலுக்கு பா.ஜ.க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ் பாபு தலைமையில் கட்சி துணை தலைவர்கள் செந்தில்குமார், ஜம்போடை சங்கர், மேற்கு மண்டல தலைவர் காஞ்சி ஜீவானந்தம், தேசிய மொழி பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ், பொதுமக்கள் ஆகியோர் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். அந்த ரயிலில் பயணம் செய்தவர்களுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் பூசணிக்காய் சுற்றி உடைத்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் ரயிலை வரவேற்றனர்.