காஞ்சிபுரம் மாவட்ட புதிய ரயில் நிலையத்திற்கு கன்னியாகுமரியில் இருந்து காசிக்கு செல்லும் காசி தமிழ் சங்க விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலுக்கு பா.ஜ.க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ் பாபு தலைமையில் கட்சி துணை தலைவர்கள் செந்தில்குமார், ஜம்போடை சங்கர், மேற்கு மண்டல தலைவர் காஞ்சி ஜீவானந்தம், தேசிய மொழி பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ், பொதுமக்கள் ஆகியோர் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். அந்த ரயிலில் பயணம் செய்தவர்களுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் பூசணிக்காய் சுற்றி உடைத்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் ரயிலை வரவேற்றனர்.
காஞ்சிக்கு வந்த காசி தமிழ் சங்க விரைவு ரயில்…. பூசணிக்காய் சுற்றி, ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்…!!
Related Posts
காதலனோடு சேர்ந்து தீக்குளிப்பு…. இறுதியில் நேர்ந்த சோகம்…. காதலி அதிர்ச்சி வாக்குமூலம்…!!
மயிலாடுதுறையில் கடந்த 9ம் தேதி இளம் பெண் சிந்துஜா தன் மீதும் மற்றும் தனது காதலன் ஆகாஷ் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி…
Read moreBreaking: தூத்துக்குடி மாவட்டத்திற்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை….!!!
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகின்ற 22ஆம் தேதி வைகாசி விசாகம் விமர்சையாக நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வருகை புரிவார்கள். இதன் காரணமாக வருகின்ற…
Read more