ஈரோடு மாவட்டத்தில் உள்ள காரப்பாடி புது மாரியம்மன் கோவில் பகுதியில் புவனேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு புவனேஸ்வரன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு புவனேஸ்வரன் தனது மனைவியின் உறவினரான 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மனைவி கர்ப்பமானார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் புவனேஸ்வரனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஈரோடு மகளிர் நீதிமன்றம் புவனேஸ்வரனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.