ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஓமன் நாட்டின் மஸ்கட் நகருக்கு வீட்டு வேலைக்காகச் சென்று அங்கு கொத்தடிமையாகச் சிக்கித் தவிக்கும் ஒரு வேதனையான செய்தி வெளியாகியுள்ளது. அந்தப் பெண்ணிற்கு மாதம் 200 இந்திய மதிப்பில் சுமார் 50,000 ரூபாய் சம்பளம் தருவதாக ஏஜெண்டுகள் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், ஓமனுக்குச் சென்ற பிறகு, வேலை தேடித் தந்த ஏஜெண்டுகளும் முதலாளிகளும் இணைந்து அவரை ஏமாற்றியுள்ளனர். தினமும் 12 முதல் 15 மணி நேரம் வரை ஓய்வில்லாமல் வெவ்வேறு வீடுகளில் மிகக் கடுமையான வேலை செய்யுமாறு அவர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.
Urgent Appeal to Hon’ble Dr. @DrSJaishankar, Minister for External Affairs, Govt. of India
Mrs. Shabnam Begum, a resident of Pahadi Shareef, Hyderabad, was allegedly lured to Muscat, Oman by a local agent with the promise of a housemaid job offering 200 Omani Riyals/month. After… pic.twitter.com/UNrKXbv3QS
— Amjed Ullah Khan MBT (@amjedmbt) July 17, 2026
“>
இந்தக் கடுமையான உழைப்புக்குக் கூலியாகக் கடந்த நான்கு மாதங்களாக அவருக்கு எந்தவொரு சம்பளமும் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, அவருக்கு முறையான உணவோ அல்லது தங்குவதற்குக் தகுந்த இடமோ கூட வழங்கப்படாமல் மிகக் கொடூரமாக நடத்தப்பட்டுள்ளார்.
முதலாளியின் இந்தத் தொடர் சித்திரவதைகளையும் கொடுமைகளையும் தாங்க முடியாத அந்தப் பெண், எப்படியோ அவரிடமிருந்து தப்பித்து மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகத்தை அடைந்து தஞ்சமடைந்துள்ளார். இருப்பினும், வேலைக்கு அழைத்துச் சென்ற ஏஜெண்டுகள் அவருடைய பாஸ்போர்ட்டைப் பறித்து வைத்துக் கொண்டதால், அவரால் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் அங்கே சிக்கித் தவித்து வருகிறார்.
இந்த அவலநிலை குறித்து சமூக ஆர்வலர் அம்ஜத் உல்லா என்பவர், அந்தப் பெண்ணின் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். உடனடியாக இந்திய தூதரகம் தலையிட்டு அந்தப் பெண்ணைப் பாதுகாப்பாக ஹைதராபாத்திற்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றிய ஏஜெண்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம், இந்த விவகாரத்தை உடனடியாகத் தகுந்த அதிகாரிகள் மட்டத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதியளித்துள்ளது.
