சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சாண்ட்ரா லாவீ கோஜ்கோவிக், தனது சொகுசான கார்ப்பரேட் வாழ்க்கையைத் துறந்து, இந்தியாவின் பின்தங்கிய கிராமப்புறங்களில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த அவர், மேற்கு வங்காளத்தின் தொலைதூர கிராமத்தில் ஒரு இலவச ஆரம்பப் பள்ளியைத் தொடங்கினார்.

 

View this post on Instagram

 

A post shared by Sandra Lavie (@sandralavie)

ஏழ்மை மற்றும் வாய்ப்புகளின்மை காரணமாகக் கல்வி கிடைக்காத குழந்தைகளுக்குப் பாடம் புகட்டுவதோடு மட்டுமல்லாமல், குழந்தை திருமணம், மனித கடத்தல் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் மாணவர்களை அவர் தயார்படுத்தி வருகிறார்.

தொடக்கத்தில் உள்ளூர் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் பெரும் சவால்களைச் சந்தித்த சாண்ட்ரா, தொடர் முயற்சியால் இன்று 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20,000-க்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்துள்ளார்.

“வாழ்க்கை வசதிகளை விட, இந்தச் சமூகத்திற்காகச் செய்யும் தொண்டே எனக்குப் பெரும் பணக்கார உணர்வைத் தருகிறது” என்று நெகிழ்ச்சியுடன் கூறும் அவர், அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்களே இப்போது அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டிகளாக மாறியிருப்பதை தனது மிகப்பெரிய வெற்றியாகக் கருதுகிறார்.