தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை, அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக ED மற்றும் IT அதிகாரிகள், கவிதாவின் இல்லத்தில் சோதனை மேற்கொண்டனர். நாள் முழுவதும் நடந்த சோதனையின் முடிவில் அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இதனிடையே, கவிதாவின் கைதை கண்டித்து தெலங்கானா முழுவதும் ஆங்காங்கே BRS கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.