நாடாளுமன்றத் தேர்தல் தேதி நாளை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பாக புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து உடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்தினார். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆலோசனையில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.