அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் உதவித்தொகையை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.”புதுமைப்பெண்” திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இனி அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். இதனால், ஆயிரக்கணக்கான மாணவிகள் பயன்பெறுவார்கள்