தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் மகளிருக்கான அதிகாரம் உரிமைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து எடுத்து கூறப்பட்டது. இதற்கு கல்லூரி முதல்வர் ஜெய் நிலா சுந்தரி தலைமை தாங்கியுள்ளார்.

இதனையடுத்து தென்காசி மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, ஓ.எஸ்.சி மைய நிர்வாகி ஜெயராணி, பெண்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் ஆகியோர் பங்கேற்று சிறப்பு உரை ஆற்றினார்கள். அந்த கருத்தரங்கில் பெண்களுக்கு அதிகாரம் என்பது என்ன? பெண்கள் தனக்கானவற்றை தேர்ந்தெடுப்பதில் கவனம் கொள்ளுதல் எப்படி? அவசர உதவி 181 1930 குறித்து தெளிவாக கூறப்பட்டது. கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்ற பிறகு விலங்கியல் துறை இணை பேராசிரியர் இசக்கியம்மன் நன்றி கூறியுள்ளார்.