தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தில் போக்குவரத்து பணிமனை உள்ளது. இந்த பணிமனைக்கு அருகே சிஐடியு அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியூசி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல மீட்பு சங்கம், ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து கம்பம்- தேனி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட 61 பேரை கைது செய்தனர். அவர்கள் நகராட்சி சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர் இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடமையாக பாதிக்கப்பட்டது.