மதுரையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் மாநகர காவல் துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி வெள்ளக்கல் ரோடு, திருப்பரங்குன்றம் ரோடு மற்றும் முத்துப்பட்டி ரோடு வழியாக காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் முத்துப்பட்டி சந்திப்பு வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகம் அனுமதித்த அனுமதி சீட்டுகளுடன் வந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும். காளைகளுடன் வரும் உரிமையாளரும் உதவியாளரும் மது போதையில் இருக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட மாடுபிடி வீரர்கள் புகைப்படம் உள்ள அனுமதிச்சீட்டு மற்றும் உரிய மருத்துவ தகுதி சான்று கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.