மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி 15ஆம் தேதி நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில் அவனியாபுரம் பகுதிக்கு உட்பட்ட 15 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாப்பதற்கும் அவனியாபுரம் பகுதிக்கு உட்பட்ட 10 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகின்றது.