தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 15ஆம் தேதி நாளை முதல் தொடங்குகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் மது கடைகளை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.. நாளை ஜனவரி 15ஆம் தேதியன்று அவனியாபுரம் பகுதிகளிலும், நாளை மறுநாள் ஜனவரி 16ஆம் தேதி அன்று பாலமேடு பகுதிகளிலும், ஜனவரி 17ஆம் தேதி அலங்காநல்லூர் பகுதிகளிலும் மது கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.