வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள லிங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவரான பிரசாந்த் , நெல்லூர்பேட்டையைச் சேர்ந்த தனியார் ஜவுளிக்கடையில் பணிபுரியும் செல்வி ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பின் இது வீட்டிற்கு தெரியவர,   செல்வி தனது குடும்பத்தினரின் எதிர்ப்பை எதிர்கொண்டு, அவர் மூன்று நாட்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

இதையறிந்த பிரசாந்த் குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், பிரசாந்தும், செல்வியும் ஏற்கனவே இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அலைபாயுதே திரைப்படம் பாணியில் திருமணம் செய்து கொண்டு, அவரவர் வீட்டில் பிரிந்து வாழ்வது தெரியவந்தது. இதையடுத்து குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி,

இருவரும் மேஜர் என்பதால், காவல்துறை அதிகாரிகள், பெண் வீட்டாரிடம் பேசி, செல்வியை பிரசாந்துடன் செல்ல அனுமதித்தனர், சினிமா காட்சியை நினைவுபடுத்தும் வகையில், நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.