நீட் விலக்கு கேட்டு திமுக நடத்திய கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்திய ஒன்றியத்திற்கு வழிகாட்டக் கூடிய திராவிட மாடல் அரசை தந்திருக்கக்கூடிய மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் வழி நடத்தப்படுபவர்கள்  தான் நாம்.நம்முடைய கடைசி மூச்சு இருக்கின்ற வரை தமிழ்நாட்டின் உரிமைக்காகவும்,  மாணவர்களுடைய கல்வி உரிமைக்காகவும்,  நீட் தேர்வு ஒழிப்புக்காகவும் தொடர்ந்து போராடிக் கொண்டே தான் இருப்போம்.

மக்களின் உணர்ச்சிக்கு நிகரான வலிமையான ஆயுதம்,  இன்னும் இந்த உலகத்தில் கண்டுபிடிக்கபடவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்கள் உணர்ச்சி ஒட்டுமொத்தமாக நீட் தேர்விற்கு எதிராக உள்ளது என்பதை நம்முடைய ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் நான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் ஒரு கோரிக்கை வைக்கின்றேன்.

அதிமுகவினரும் வாருங்கள்… நீட்டு ஒழிப்பிற்காக சேர்ந்து போராடுவோம் என்று நான் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தேன்.  இங்கே மீண்டும் அதனை கூற விரும்புகின்றேன். அந்த கிரெடிட்டை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.  நீட் தேர்வை ஒழித்தால் போதும் என்று அழைப்பு விடுத்தேன். இப்போது மீண்டும் அழைப்பு விடுகின்றேன். வாருங்கள்,  இந்த கையெழுத்து இயக்கத்தில் நீங்களும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.  அனைத்து இயக்கத்தங்களுக்கும் என்னுடைய அழைப்பை விடுக்கின்றேன் என உதயநிதி பேசினார்.