சேலத்தில் செய்தியாளிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, 25.09.2023 அன்று தலைமை கழகத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் தலைமைக் கழக செயலாளர்கள் –  மாவட்ட கழக செயலாளர் – மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வுகளை அவர்கள் தெரிவித்தார்கள். அடிப்படையில்…

அவர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில்,  ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு… அந்த தீர்மானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விலகிக் கொள்கிறது என்றும்,  தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என்றும்   தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன. அதன் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விலகியது என தெரிவித்தார்.