உத்தரப்பிரதேசம், கோரக்நாத் கோயில் விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், உலகில் ஒரே ஒரு மதம் மட்டுமே உள்ளது. அதுவே சனாதன தர்மம். இது தாக்கப்பட்டால் உலகம் முழுவதும் உள்ள மனித குலத்திற்கான நெருக்கடியாகவே அமையும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் யோகி ஆதித்யநாத்தின் இந்த பேச்சு, அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக  இருப்பதாக  கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமைச்சர் உதயநிதி சனாதன தர்மம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.