சேலத்தில் செய்தியாளிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, 25.09.2023 அன்று தலைமை கழகத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் தலைமைக் கழக செயலாளர்கள் –  மாவட்ட கழக செயலாளர் – மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வுகளை அவர்கள் தெரிவித்தார்கள். அடிப்படையில்…

அவர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில்,  ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு… அந்த தீர்மானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விலகிக் கொள்கிறது என்றும்,  தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என்றும்   தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன.

அதன் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விலகியது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக எந்த மாதிரி கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறது என்பதற்கு ”பொறுத்திருந்து பாருங்கள்” நிச்சயமாக எந்தெந்த கட்சி கூட்டணியில் சேரும் என்பதை ஊடகத்திற்கும் பத்திரிக்கைக்கும் நாங்கள் தெரிவிப்போம்.

வி.பி துரைசாமி கூட்டணி தொடர பேச்சுவார்த்தை நடக்கிறது என்ற கேள்விக்கு,  ”அதுக்கு நாங்க என்ன பதில் சொல்ல முடியும் ? அவர் சொன்னா நான் என்ன கருத்து சொல்ல முடியும்.  எங்களுடைய கருத்து இதுதான். எங்களுடைய முடிவும் அதுதான்.

2  கோடி தொண்டர்களின் உணர்வுகளை தலைமைக் கழகத்தின் நடைபெற்ற அந்த கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு,  அறிவிக்கப்பட்டு விட்டது. இதை வேண்டுமென்றே திட்டமிட்டு தினம்தோறும் கேட்டுட்டு இருந்தா நான் என்ன சொல்றது ? எங்களுக்கு ஒண்ணுமே புரியல. அதை வி.பி துரைசாமி கிட்ட தான்  கேட்கணும். நாங்க என்ன சொல்றது ? எங்க கட்சி பத்தி தான் நாங்க சொல்ல முடியும் என தெரிவித்தார்.