“மணி ஹெய்ஸ்ட்” என்ற வெப்சீரிஸை  நிஜமாக்கும் விதமாக ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் உள்ள  ஒரு பகுதியில் காரில் வந்த இளைஞர் ஒருவர் திடீரென்று வண்டியை  நிறுத்தி மேலே ஏறி உள்ளார். அந்த மணி ஹெய்ஸ்ட் சீரியஸில் கொள்ளை கும்பல் அணிந்திருப்பதை போலவே உடையையும், முகமூடியையும் போட்டிருந்தார். அதனை தொடர்ந்து அவர் தொடர்ந்து பணத்தை வீசிக்கொண்டே இருந்தால் மக்கள் கூட்டம் சேர்ந்து பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் பணத்தை எடுக்க தகராறு அடிதடியும் ஏற்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த  காவல் துறையினர் அங்கு வந்து அந்த நபரை கைது செய்தனர். மேலும் அவர் யார்? அவர் வீசிய பணம் யாருடையது? அவருடைய பின்னணி ஆகிய குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.