தேவதானப்பட்டி அருகே பாஜக கொடிக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள்.

தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி மெயின் ரோட்டில் பாஜக கொடி கம்பம் இருக்கின்றது. இங்கே நேற்று காலை பார்த்த போது அங்கே கம்பத்தில் இருந்த கொடியை காணவில்லை. அந்த கொடியை கம்பத்திற்கு கீழே எரிந்த நிலையில் இருந்தது. இதை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். போலீசாரின் விசாரணையில் நேற்று முன்தினம் இந்த பகுதிக்குள் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் புகுந்து கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கொடியை கீழே இறக்கி தீ வைத்து எரித்தது தெரியவந்துள்ளது. இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து பாஜக கொடியை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள்.