புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி பகுதியில் சிலர் சட்டவிரதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சுப்பிரமணி, சங்கர், பெருமாள் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.