புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி காரைக்குடி சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் சண்முகம் உடனடியாக கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.