பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேசபுரத்தில் நேற்று இரவு 13 வயது சிறுவன் சாலையோரமாக நின்று செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் சிறுவனின் கையில் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

சிறிது நேரத்தில் அந்த செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக அந்த பகுதியில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே திருடர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.