நீலகிரி மாவட்டத்தில் உள்ள அத்திகுன்னா கேகே நகர் தொகுதிக்குள் நேற்று முன்தினம் கரடி நுழைந்தது. பின்னர் கரடி கார்த்திக் என்பவரது வீட்டிற்கு பின்புறமாக சென்று சமையல் அறைக்குள் நுழைந்தது. இதனையடுத்து சமையலறையில் இருந்த எண்ணெய் மற்றும் பொருட்களை தின்று விட்டு அங்கேயே நின்றது. அந்த சத்தம் கேட்டு கார்த்திக் சமையலறைக்கு சென்றார். அப்போது கரடி நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் சத்தம் போட்டதால் கரடி அங்கிருந்து ஓடி புதர்க்குள் மறைந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.