சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பு நாயக்கன்பாளையம் பகுதியில் விவசாயியான முத்துராஜர் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு முத்துராஜா வாழக்குட்டப்பட்டி பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முத்துராஜாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.