திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தமாடிப்பட்டியில் காளியம்மன் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 113 மாடுபிடி வீரர்களும், 481 காளைகளும் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டது. இதனையடுத்து சீறிப்பாய்ந்த காளைகள் முடியதால் 24 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக ஒரு மாடுபிடி வீரர் 17 காளைகளை அடக்கி அசத்தியுள்ளார். இதனையடுத்து பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பீரோ, டிவி, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.