தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தண்டுக்காரன்பட்டி கிராமத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அதே பகுதியில் வசிக்கும் இந்திரா, சிவா ஆகியோர் வீடுகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் இந்திரா, சிவா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.