தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிதாக 1021 மருத்துவர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு நாளை பிப்ரவரி மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தேர்வான மருத்துவர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் தரவரிசைப்படி கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கான பணியிட கலந்தாய்வு நாளையும் நாளை மறுநாளும் சென்னை எழும்பூர் குடும்ப நல பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது.

தரவரிசையில் 1 முதல் 500 வரையில் உள்ள மருத்துவர்களுக்கு நாளையும், 501 முதல் 1021 வரை உள்ள மருத்துவர்களுக்கு பிப்ரவரி நான்காம் தேதியும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வில் பணியிடங்களை தேர்வு செய்தவர்கள் அனைவரும் நியமன ஆணை பெற்றதிலிருந்து 15 நாட்களுக்குள் பணியில் சேர வேண்டும். இந்த கலந்தாய்வுக்கு வரும் மருத்துவர்கள் வெள்ளை அங்கி அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.