நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில்  விஜயகாந்த் நலமின்றி இருந்தபோது நடிகர்கள் பலரும் அவரை வந்து பார்த்தனர். ஆனால், நடிகர் தியாகுவுடன் விஜயகாந்துக்கு நல்ல நட்பு இருந்தது என பிரேமலதா கூறியுள்ளார்.

தியாகு வந்து விஜயகாந்தை பார்த்தால் அவரது கையை பிடித்துக் கொண்டு விடவே மாட்டார். இன்னும் சிறிது நேரம் இருங்கள் என கூறுவார். அந்த அளவு இருவரும் நட்புடன் இருந்தனர் என கூறியுள்ளார். இந்த பழைய வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.