திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யா மொழி,  இன்றைக்கு, நாங்கள் செயல்படுத்துவதற்கு அண்ணன் துரைமுருகனை போன்றவர்கள் வழிகாட்ட வேண்டும் என்கிற வகையில் தான் இதை நான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். பொருத்தமான நபர்…. பொருத்தமான அணிக்கு…. ஏனென்றால் அவரும் ஒரு அணியின் செயலாளராக இருந்து வந்தவர் தான்.

அணியினுடைய உடைய பிரச்சனை, அணியினுடைய வலி… அணியின் உடைய அங்கீகாரம்….  இதெயெல்லாம் முழுமையாக உள்வாங்கியவர் தான்…. அப்படிபட்ட அண்ணன் துரைமுருகன் அவர்கள் இங்கே வருகை தந்துள்ளார்கள்… காணொளியில் பார்த்தேன் நானு. ரொம்ப நல்லா மாநகர கழகத்தை சார்ந்தவர்கள் செஞ்சி இருக்கீங்க…. அதுக்கான பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்….

பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்ற, அதே வேளையில், தொடர்ந்து நாம் பயணிப்போம்.  நாம செஞ்சதை மட்டும் சொன்னா போதாது…. இன்னும் செய்ய இருக்கின்றோம்  என்பதையும்‌ கடைசியா முடிக்கும்போது சொன்னீங்க…

இது எதோ இந்த ஓராண்டு மட்டுமல்ல, நூறாண்டு கடந்தும் நம்முடைய முத்தமிழ் அறிஞர்  கலைஞருடைய புகழை, போற்றுவோம். போற்றுவோம். போற்றுவோம், என்று சொல்லி, வருகை தந்திருக்கின்ற, உங்கள் அனைவருக்கும், குறிப்பாக அண்ணனுக்கு, என்னுடைய நன்றியையும், வாழ்த்துக்களையும்,  தெரிவித்து, இத்துடன் என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.