வேலூர் மாவட்டத்திற்கு வருகின்ற மே 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார். அதாவது குடியாத்தம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கங்கை அம்மன் திருக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி 1-ம் தேவி சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

இதில் சிரசு ஊர்வலம் மே 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் கலந்து கொள்ள ஏதுவாக மே 14 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஜூன் 22ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 23ஆம் தேதி அமைச்சகப் பணியாளர்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.