ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கந்தசர் கிராமத்தைச் சேர்ந்த பரமானந்த முதுலி (வயது 45) என்பவர் தனது மனைவி சுகந்தியுடன் பல ஆண்டுகளாக சண்டையிட்டு வந்துள்ளார். மனைவிக்கு வேறு ஆணுடன் திருமணத்தை மீறிய தொடர்பு இருப்பதாக பரமானந்தா சந்தேகப்பட்டார்.

இது தொடர்பாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சுகந்தி, கணவரின் அந்தரங்க பகுதியை கத்தியால் வெட்டினார். பாதிக்கப்பட்ட கணவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.