வெள்ளை அறிக்கை கேட்டால் கோபம் வருகிறதா ?உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது சென்னை முழுவதும் மிக்ஜாம் புயலின் காரணமாக வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. அரசு தணண்ணீரை வெளியேற்ற நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒருசில இடங்களில் வடியாமல் இருக்கிறது. இந்நிலையில் வெள்ளை அறிக்கை கேட்டால் கோபம் வருகிறதா ? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதாவது 2015ம் ஆண்டு புயல் வெள்ள பாதிப்பின்போது, சென்னையில் நடந்த மழைநீர் வடிகால் பணிகளுக்கு செலவழித்த நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடும்படி கேட்டவர்தான் முதல்வர் ஸ்டாலின். தற்போது அதே கேள்வியை, எதிர்கட்சியான அதிமுக கேட்டால் அரசுக்கு கோபம் வருகிறதா என்று உதயகுமார் வினவியுள்ளார்.