மிக்ஜாம் புயல் மழை வெள்ள நிவாரண நிதி குறித்தும், வங்கிக் கணக்கில் செலுத்தாமல், நேரடியாக பணமாக கொடுப்பது ஏன் எனவும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த அவர், ‘நாங்க என்ன அவங்க அப்பன் வீட்டு காசையா கேட்டோம். தமிழக மக்கள் கொடுத்த வரிப்பணம் தானே? என்று  கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் மற்ற மாநிலங்களுக்கு கேட்ட உடன் கொடுக்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டை மட்டும் பிரித்து பார்ப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வெள்ள நிவாரண நிதி என்ன ஏடிஎம்-ஆ.. கேட்ட உடன் எடுத்துக் கொடுப்பதற்கு என்ற மத்திய அமைச்சருக்கு இவ்வாறு, உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார்.