நீலகிரி மாவட்டம் உதகையில் விளையாடிக் கொண்டிருந்த நபர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நடைபெற்ற மூத்தோர் கூடை பந்து போட்டியில் மதுரையை சேர்ந்த நேருராஜன் என்பவர் கலந்து கொண்டார். 60 வயதாகும் இந்த நபர் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை உடனடியாக அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.