பட்டாசு ஆலைகளை உள்குத்தகைக்கு விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மேகநாதரெட்டி எச்சரித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை உரிமதாரர்கள் பிறருக்கு உள்குத்தகைக்கு விடக்கூடாது என்று ஆட்சியர் மேகநாதரெட்டி கூறியுள்ளார். விதிகளை மீறி உள்குத்தகைக்கு விட்டால் பட்டாசு உரிமம் பெறுவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படும். வெடி விபத்துகளை தவிர்க்க ஆலை உரிமையாளர்கள் உரிய விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனுமதி பெறாத இடங்களில் கருந்திரி போன்றவை தயாரிப்பது கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.