ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தை சேர்ந்த சிறுமிகள் பாயல் மற்றும் ரித்திகா ஆகிய இருவரும் தங்கள் வீட்டில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது உபயோகப்படுத்தாத ஐஸ் பெட்டி ஒன்றிற்குள் சென்று இருவரும் மறைந்திருந்துள்ளனர். அப்போது தவறுதலாக ஐஸ்பெட்டி வெளியில் லாக் ஆகிவிட்டது.

இதனால் இரண்டு சிறுமிகளுக்கும் ஐஸ் பெட்டியின் உள்ளே மூச்சு திணற ஆரம்பித்துள்ளது. விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளை காணாமல் வீட்டிலிருந்தவர்கள் தேடிய நிலையில் ஐஸ் பெட்டிக்குள் இருவரும் சடலமாக இருந்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமிகளின் உடலை பிரேத பரிசோதனை முடித்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.