அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம்- சிதம்பரம் சாலையில் தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்திற்கு பின்புறம் கவியரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரக்கு வாகன டிரைவராக இருக்கிறார். நேற்று கவியரசன் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கவியரசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கவியரசன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.