சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் கணக்கர் தெருவில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது நண்பருக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் பிரவீன் குமாரின் தாய் அமுதா தங்க நகை வாங்குவதற்காக மகனிடம் தங்க நகை வாங்குவதற்காக கடனாக பணம் கேட்டுள்ளார். அப்போதுதான் பிரவீன் குமார் தனது நண்பருக்கு பணம் கொடுத்தது அமுதாவுக்கு தெரியவந்தது.

இதனால் தாய்க்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரவீன் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரவீன் குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.