சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு வ.உ.சி நகர் ஆறாவது தெருவில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். நேற்று காலை கோபி மளிகை கடை ஷட்டரை திறந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கோபியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் கோபி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கோபி வீட்டின் அருகே இருக்கும் மின்சாரப்பட்டியில் இருந்து சிலர் திருட்டுத்தனமாக மின் இணைப்பை எடுத்து பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த திருட்டு மின்சார வயர் கோபியின் கடை வழியாக சென்றதால் ஷட்டரை திறந்த போது மின்சார வயர் உரசி கோபி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.