விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளை பொட்டல் கிராமத்தில் முன்னாள் எம்.எல்.ஏ சாத்தையா, அவரது மனைவி வசந்தமாலா ஆகியோருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் அமைந்துள்ளது. அவர்களுக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியில் வசிக்கும் ராஜ முனியாண்டி, முத்துலட்சுமி ஆகியோருக்கு போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்துள்ளனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் ராஜ முனியாண்டி, முத்துலட்சுமி, அவர்களது மகன் முருகன், சார்பதிவாளர், பத்திர எழுத்தர் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.