விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எரிச்சநத்தம் பர்மா காலனியில் பரந்தாமன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு அமர்ந்திருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆபாசமாக பேசி கொண்டிருந்தார். இதனை பரந்தாமன் கண்டித்தார். ஆனாலும் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி ஆபாசமாக பேசியதால் பரந்தாமன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கண்டித்து காவல் நிலையத்திற்கு வருமாறு உத்தரவிட்டனர். இதனால் கோபமடைந்த கிருஷ்ணமூர்த்தி பரந்தாமனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.