கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்றவற்றிற்காக சிறப்பு முகாம் ஒன்று வருகின்ற 25 மற்றும் 26 ஆம் தேதி அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது. இது குறித்து விளக்குவதற்காக தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கரூர் கோட்டாட்சியர் ரூபினா சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் அலுவலர்கள், நகராட்சி அதிகாரி, தாசில்தார், காகித ஆலை நிறுவனத்தின் இயக்குனர் என பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் போது காகித ஆலை பணியாளர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு குறித்து விளக்கப்பட்டது.