கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை புங்கரை பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. கூல்தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் மூன்று லட்சம் கடன் வாங்கியுள்ளார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கடன் தொகையும் அதற்கான வட்டியையும் செல்லதுரை கட்டி முடித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கடன் கொடுத்த நபர் இன்னும் 70 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று செல்லதுரையிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் மிகுந்த மன வேதனையடைந்த செல்லதுரை சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விஷம் குடித்து மயங்கி உள்ளார். இதயைடுத்து தக்கலை மருத்துவமனையில் அவருக்கு மேல் சிகிச்சை கொடுக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி செல்லதுரை பரிதாமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.