பிரேசிலின் தெற்குப் பகுதியில் இருக்கும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பிரியா கிராண்டே (Praia Grande) பகுதியில், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹாட் ஏர் பலூன் (Hot Air Balloon) ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரெனத் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சாண்டா கேடரினா மாகாணத்தில் உள்ள பள்ளத்தாக்குகளின் அழகை ரசிப்பதற்காகப் பைலட் உட்பட மொத்தம் 21 பேருடன் அந்தப் பலூன் நடுவானில் பறந்தபோது, எதிர்பாராத விதமாகப் பயணிகள் அமர்ந்திருக்கும் கூடைப் பகுதிக்குள் (Basket) பயங்கரமாகத் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.
A hot-air balloon carrying approx 22 people caught fire mid‑air and crashed in Brazil during the early morning hours on 21 Jun 2025
8 people died and 13 injured.
You can see few jumping, they died. Who remained, survived. #baloon #brazil #Accident #news #viralvideo… pic.twitter.com/X3MUdRJoOU
— बिहार Bihar (@Bihar_Nawada) June 21, 2025
தீ கொழுந்துவிட்டு எரிவதைப் பார்த்த பைலட், உடனடியாகப் பலூனை அவசரமாகக் கீழே இறக்க முயன்று, தரைக்கு அருகில் வந்ததும் பயணிகளைக் கீழே குதிக்குமாறு கத்தியுள்ளார்; இதில் பைலட் உட்பட 13 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், மற்றவர்கள் குதிப்பதற்குள் பலூன் எடை குறைந்து மீண்டும் உயரே பறக்க ஆரம்பித்து, பின்னர் மொத்தமாகக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
இந்த உறைபனிய வைக்கும் கொடூர விபத்தில் இரண்டு தம்பதிகள், தாய்-மகள், கண் மருத்துவர் மற்றும் பனிச்சறுக்கு வீராங்கனை உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த நிலையில், விபத்து குறித்து பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்;
மேலும், விமானப் போக்குவரத்து முகமை இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை அடுத்து, சம்பந்தப்பட்ட சுற்றுலா நிறுவனம் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள செய்தி தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
