எழில் நகர் பகுதியில் உள்ள திருப்பாச்சேத்துக்குளம் பகுதியில் மீண்டும் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது குறித்துப் புகார் அளிக்கப்படும்போது அரசுத் துறைகள் பொறுப்பற்ற முறையில் பதிலளிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எழில் நகரின் திருப்பாச்சேத்துக்குளம் பகுதியில் குடிநீர் வராததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வாரக்கணக்கில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் போராடி வருகின்றனர். குடிநீர் விநியோகம் குறித்துக் கேட்டால், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடிநீர் வாரியமும், குடிநீர் வாரியமும் மாறி மாறிப் பதுங்கிப் பதிலளிப்பதாக மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். வெள்ளிக்கிழமை காலை தவிர மற்ற நாட்களில் விநியோகம் சரியாக இருப்பதாகக் குடிநீர் வாரியம் வாதிட்டாலும், களத்தில் நிலைமை முற்றிலுமாக மாறாக உள்ளது.

“>

 

நேற்று காலை வர வேண்டிய குடிநீர் இன்று மாலை வரும் என்று வழக்கமான அலட்சியப் பதிலை அளிக்கும் அதிகாரிகள், மக்களின் நியாயமான முறையீட்டைப் பொருட்படுத்தாமல் “வழக்கம்போல் தண்ணீர் வரும், எதற்கு வீண் புகார்?” என்பது போன்ற தொனியில் நடந்து கொள்வது பொதுமக்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.